திருவொற்றியூர்: திருவொற்றியூர் போலீசார் காலடிப்பேட்டை மேற்கு மாடவீதி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த 5 பேரை பிடித்து சோதனையிட்டபோது 2 அடி நீளமுள்ள 2 கத்திகள் வைத்திருந்தது தெரிந்தது. இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூரை சேர்ந்த சுதாகர் (23) தனசேகர் (22), ராமச்சந்திரன் (34), முருகன் (22), சரவணன் (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.