சென்னை: கல் அரைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு யூனிட்டுகள் அமைக்க அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: பாறைகளை ஜல்லிகளாக உடைக்க அமைக்கப்பட்டுள்ள கல் அரைக்கும் யூனிட்டுகளால் காற்று மாசுவால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுவதை தடுக்க கடந்த 2004ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனைகள் கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு பிறப்பித்தது. எனவே, விதிமுறைகளுக்கு முரணான கல் அரைக்கும் யூனிட்டுகளுக்கு அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.