5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வெப்ப சலனம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வெப்ப சலனம் அதிகரித்து வளி மண்டல மேல் அடுக்கில் காற்றின் சுழற்சி ஏற்பட்டது. வங்கக் கடல் பகுதியில் அந்த காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதனால் தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.

Related Stories: