சேலம்: சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்பிக்கவிட்டது தொடர்பாக 3 எஸ்பிக்கள் உட்பட 8 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2009ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற ராணி என்ற பெண், சென்னையில் டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு வந்தார். பின்னர் 20நாட்கள் கழித்து அந்த சிறுமி ஊர் திரும்பினார். அப்போது தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் ராணியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராணிக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு கூறினார். அதேநேரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டதாகவும் தனது தீர்ப்பில் எழுதி இருந்தார். இந்நிலையில், சேலம் மாவட்ட அரசு வழக்கறிஞர் தனசேகரன் அரசு உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: