கோவை: உபரி நீரை சேமிக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார். மேலும் 1,869 ஏரிகளை பராமரிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.