சென்னை: சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சங்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 10 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் உதவி ஆட்சியர் ரத்னா ஆய்வு செய்த போது தி.மலையை சேர்ந்த 4 குடும்பங்களை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.