சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு நிலத்தை அபகரித்த புகாரில் தந்தை பிச்சமுத்து, மகன் ஹரிகிருஷ்ணன், பார்த்தசாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அலுமினியம் நிறுவனத்தின் 4.44 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக இவர்கள் மீது புகார் சுமத்தப்பட்டது.