வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. செஞ்சி, காவேரிப்பாக்கத்தில் தலா 5 செ.மீ மழையும், நீலகிரி ஜி.பஜார், புதுக்கோட்டையில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: