பரமக்குடி: தீண்டாமையை ஒழிக்க போராடியவர் இம்மானுவேல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 62வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.பி., கனிமொழி மரியாதை செலுத்தினர்.