திருவள்ளூர்: பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் மண்டியிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட 11 மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்கவும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரியில் உள்ள விடுதியை மூடிவிட்டு, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தும் மாணவர்கள் போராட்டத்தை தொடருகின்றனர்.