அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. அமைச்சர் எம்.சி.சம்பத் கீழணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். வடவாறு வாய்க்காலில் வினாடிக்கு 1800 கன அடியும் வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்காலில் தலா 400 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பால் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் சுமார் 39,050 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.