வாஷிங்டன்: அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் நள்ளிரவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2001, செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தின் 19-ம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நள்ளிரவில் ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.