அன்னூர்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வன்னியன்கோவில் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை தாண்டி சென்றபோது, போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் அவரை துரத்திக் கொண்டு வந்துள்ளார். இதை கண்டு பயந்துபோன பெண், வாகனத்தை வேகமாக இயக்கினார். அப்போது அவரை வாகனத்தில் வழிமறித்த பிரபாகரன் என்ற அந்த போலீஸ்காரர் ‘‘ ஏய் நீ அழகாக இருக்கிறாய்... உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது...’’ எனக் கூறி ஆபாசமாக பேசியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை பிரபாகரன் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பீதியடைந்த அந்த பெண் அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கும் சென்று அவரிடம் தகாத வார்த்தையில் போலீஸ்காரர் பிரபாகர் பேசியுள்ளார்.