கோவை: கோவைநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஹெல்மெட் அணியாமல் செல்வது,அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரை பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி கோவை காளப்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் கார்த்திக்(27) என்பவர் பைக்கில் வேலாந்தாவளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக தெரிகிறது.