தேனி: தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் பொன்னுப்பிள்ளை என்பவரின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். கடந்த வாரம் இவரது ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வீரபாண்டி போலீஸ் குடியிருப்பு முன் முத்துச்சாமி சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் குடியிருப்பு முன் உள்ள இறைச்சிக்கடையில், திருடு போன இவரது ஆட்டின் தலையும், தோலும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துச்சாமி, உடனே இறைச்சிக்கடை நடத்தி வந்த சின்னத்தம்பியை(28) பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தார்.