×

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கை வீரர்கள் 10 பேர் அணியில் இருந்து விலகல்

கொழும்பு : பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்து இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து முன்னாள் வீரர்கள் 10 பேர் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தில் 2 அணிகளும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கை அணியின் கேப்டன் கருணரத்ன, நிரோஷன் டிக்வெலா, குஷால் பெரேரா, தனஞ்செய டிசில்வா, திசைரா பெரேரா, அகில தனஞ்செய, சண்டிமால், மேத்யூஸ், லக்மால் மற்றும் மலிங்கா ஆகிய 10 வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து  விலகியுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை பங்கேற்று இருந்த போது, வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளை தவிர வேறு எந்த அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Pakistan ,Sri Lankan , Tour, Sri Lanka, soldiers, deviation, Pakistan, terrorists, attack
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்