கொல்கத்தா: பொருளாதார மந்த நிலை, அதிக ஜிஎஸ்டி போன்றவற்றால் நகை தொழில் துறையில் வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய நவரத்தினம் மற்றும் நகை விற்பனையாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது.பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் சூரத்தில் உள்ள வைர நகை தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், அகில இந்திய நவரத்தினம் மற்றும் நகை விற்பனையாளர் கவுன்சில் துணை தலைவர் சங்கர் சென் நேற்று கூறியதாவது:பொருளாதார மந்த நிலையால் நகை தொழில் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகை விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் திறமையான நகை விற்பன்னர்கள் கூட வேலை இழக்கக்கூடிய அபாய நிலையில் உள்ளனர்.