புதுடெல்லி: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2007-2011 காலக்கட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஓஎன்ஜிசி, கெயில் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க ஏஜென்டுக்கு கமிஷனாக ₹77 கோடிக்கு மேல் கமிஷன் பெற்றுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் ரோல்ஸ் ராய்ஸ்சின் இந்திய நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த அசோக் பாட்னி மற்றும் அவரது நிறுவனங்களான ஆஸ்மோர் பிரைவேட் லிமிடெட், மும்பையை சேர்ந்த டர்போ டெக் இன்ஜின் சர்வீசஸ் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது லஞ்சம் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சுடன் மட்டும் கடந்த 2000 முதல் 2013ம் ஆண்டு வரை ₹4,700 கோடி வர்த்தக வாய்ப்பை ரோல்ஸ் ராய்ஸ் பெற்றுள்ளது.