இத்தாலியில் நடக்கின்ற விநோதமான திருவிழா ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்து செம ஹிட்டாகிவிட்டது. 11ம் நூற்றாண்டில் இத்தாலியின் வயல் வெளிகளை விஷப்பாம்புகள் சூழ்ந்திருந்தன. அதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்களும் வயல்வெளிக்குள் செல்லவே பயந்தனர். அப்போது புனித துறவியான டொமினிக் தனது மாய சக்தியால் பாம்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்; விவசாயமும் செழிப்படைந்தது என்பது அங்கே காலம் காலமாக சொல்லி வரும் ஒரு கதை.