முதலமைச்சராக இருந்தபோது என்னை கிளார்க் போல் காங்கிரஸ் நடத்தியது: குமாரசாமி புகார்

கர்நாடகம்:  முதலமைச்சராக இருந்த போது என்னை குமாஸ்தா போல காங்கிரஸ் நடத்தியது என குமாரசாமி புகார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தன்னை கிளார்க் போல் நடத்தியதாக கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தான் காரணம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா புகார் கூறியிருந்தார். இது  தொடர்பாக பேசிய குமாரசாமி 14 மாதங்கள் தாம் முதலமைச்சராக இருந்ததாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியால் தாம் பெரிதும் அவமானம் படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ தனது முகத்தில் தாள்களை வீசி எரிந்ததாகவும் தெரிவித்துள்ள குமாரசாமி, எவ்வளவு நாள் தான் இவ்வாறு அடிமையாக இருப்பதை விரும்ப முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை அடுத்து அரசை நடத்தியது சித்தராமையா தான் என்று குற்றம் சாட்டியுள்ள குமாரசாமி இந்த அரசியலால் தாம் மிகவும் வெறுப்பு அடைந்துவிட்டதாக கூறியுள்ளார். பாஜக வை காட்டிலும் மதசார்பற்ற ஜனதா தளத்தை பெரிய எதிரி போல் காங்கிரஸ் கருதியதாக தெரிவித்துள்ள குமாரசாமி, தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சித்தராமையா முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நேரடி விவாதத்திற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.

Related Stories: