இஸ்லாமபாத் : காஷ்மீர் விவகாரத்தால் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது. இஸ்லாமபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஆஷிக் அவான், திட்டமிட்டபடி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் என்றார். இரு நாடுகளுக்கான உறவில் பிரச்சனை ஏற்பட்டாலும் கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு பாகிஸ்தானின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று கூறினார்.