சென்னை: சென்னை குடும்ப நீதிமன்ற வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த துர்காதேவி (26) என்பவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த காவலர்கள் பெண்ணை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பிடுங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.