மதுரை மேலூரில் மின் கசிவு காரணமாக தியேட்டரில் திடீர் தீ

மேலூர்: மேலூரில் உள்ள ஒரு திரையரங்கத்தில் நேற்று மதிய காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது மின் கசிவு காரணமாக தீப்பற்றியது. உடனடியாக பார்வையாளர்களை வெளியேற்றி தீ அணைக்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூரில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று மதிய காட்சி ஓடிக் கொண்டிருந்த போது மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது.

இதனால் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக தியேட்டர் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி விட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் உடனடியாக அதை அணைத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தியேட்டர் தப்பியது.

Related Stories: