திருமலை: திருப்பதி பெத்த காப்பு லேஅவுட் பகுதியில் தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த லாட்ஜில் கடந்த 23ம் தேதி மாலை 4 மணிக்கு முருகன் என்பவர் சிந்தியா என்ற பெண்ணுடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்து அறை எண் 205ல் வாடகைக்கு எடுத்து தங்கினர்.அறைக்குள் சென்றவர்கள் மீண்டும் வெளியே வரவில்லை. மேலும் அவர்கள் அறை எடுத்த நேரமும் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அறையின் கதவு வெளியே பூட்டப்பட்டு இருந்தது. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து ஜன்னல் வழியாக லாட்ஜ் ஊழியர்கள் பார்த்தனர். அப்போது பெண் ஒருவர் சடலமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.