×

ராமநாதபுரம் அருகே துப்பாக்கியுடன் பெண் கைது

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வள்ளி (42). கணவனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டில் தையல் தொழில் செய்து வரும் வள்ளி, இலங்கைக்கு  கடத்துவதற்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்துள்ளதாக அப்பகுதியில் பேச்சு எழுந்தது. இவரின் வீட்டுக்கு இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து செல்வதாகவும் பிரப்பன்வலசை விஏவுக்கு கிடைத்த தகவலின் புகாரின்  பேரில் உச்சிப்புளி போலீசார் நேற்று முன்தினம் இரவு வள்ளி வீட்டை சோதனையிட்டனர். அப்போது, கைத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், வள்ளியை கைது செய்தனர். அந்த  துப்பாக்கி யார் வாங்கி கொடுத்தது, எதற்காக வைத்திருந்தார், இரவு நேரங்களில் வந்தவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா வியாபாரி பூமிநாதனுக்கும், வள்ளிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. பூமிநாதன்  துப்பாக்கியை வாங்கி வள்ளி வீட்டில் மறைத்து வைத்திருந்தாரா என்றும் விசாரணை நடக்கிறது.

Tags : Woman arrested with gun near Ramanathapuram
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...