ஆலந்தூர்: ஆலந்தூரில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. சென்னை தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா 111வது பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்., நிதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம் தலைமை வகித்தார். இலக்கிய அணிகளின் நிர்வாகிகள் எம்.எஸ்.மணி, மந்தவெளி நடராஜன், கோபி, ஜவகர்தீன், பரணி, குமார், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.