சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையம் பழுது ஏற்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1, அலகு 2 ஆகியவற்றுக்கு தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம், கடன் மற்றும் பதவி உயர்வு ஆகியவை எண்ணூர் அனல் மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து, வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சுமார் 47 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி அறிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் 5 மாதம் ஆகியும் இதுவரையில் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தெரிகிறது.