சென்னை: விமானத்தில் சரியான நேரத்தில் இயந்திரக்கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் உள்பட 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து உதய்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 178 பயணிகள் 5 விமான ஊழியர்கள் உட்பட 183 இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில் விமானம் தொடர்ந்து பறப்பது பெரும் ஆபத்து என சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை மேற்கொண்டு இயக்கவேண்டாம். மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமான நிலைய ஓடு பாதையை சுற்றிலும் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக்குழுவினர், அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டனர்.