புனே: புனே அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தாசில்தாரும் அவருடன் இருந்த அதிகாரிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வருபவர் சோனாலி மெட்கரி. நேற்று முன்தினம் சோனாலியும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அரசு அலுவல் விஷயமாக இரண்டு வாகனங்களில் வெளியே சென்றனர். அவர்கள் உஜ்ஜைனி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு டிராக்டர் மற்றும் டிராலி லாரி வந்து கொண்டிருந்தன. அவ்விரு வாகனங்களிலும் மணல் ஏற்றப்பட்டிருந்தது.இதனை கவனித்த சோனாலி மற்றும் அதிகாரிகள், மணல் ஏற்றி வந்த டிரைலர் லாரி மற்றும் டிராக்டரை வழிமறித்தனர். அப்போது, லாரியில் இருந்த டிரைவர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். தங்களுக்கு வழிவிடவில்லை என்றால், அரசு வாகனங்கள் இரண்டையும் இடித்து தள்ளிவிட்டு சென்று விடுவோம் என்று மணல் மாபியாக்கள் தாசில்தார் சோனாலியை பார்த்து மிரட்டினர்.