பாட்னா: வீட்டில் ஆயுதம் வைத்திருந்ததால் ‘உபா’ சட்டத்தில் கைதான சர்ச்சைக்குரிய பீகார் சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் சிங், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பீகார் மாநிலம், மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் 2 முறை எம்எல்ஏ.வாக இருந்தவர் ஆனந்த் சிங். ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்த இவர், முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சியில் இருந்து விலகி, இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.