புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் கலெக்டர் வேலைக்கு ஆள் தேவை என கறம்பக்குடி தாலுகா முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பகுதிகளில் முழுவதும் கருத்தாயுதக்குழு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், வேலைக்கு ஆட்கள் தேவை, மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராம புல எண் 244ல் உள்ள வெட்டுக்குளத்தை எப்படியாவது மத்திய புலனாய்வு துறை மூலமாவது கண்டுபிடித்து ஆக்ரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசியல் அமைப்பு விதிகளின் கீழ் பணி புரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை. காலிப்பணியிடங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், தகுதி- பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம்.