நாகை: வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 2பேர் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து காவல்நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.