ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான தனிக்கொடி தலைமைச் செயலாகக் கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள மாநில தலைமைச் செயலகக் கட்டிடத்தில் தேசியக் கொடியுடன் காஷ்மீர் கொடியும் பறந்து கொண்டு இருந்தது. தற்போது தேசிய கொடி மட்டும் பறக்க விடப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தின் படி தேசியக்கொடியுடன், அம்மாநிலம் தனிக்கொடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன், அதை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது.