மதுரை: மதுரையை அடுத்த மேலூரில் கணேஷ் திரையரங்கில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கணேஷ் காம்ப்ளெக்ஸில் உள்ள திரையரங்குகளில் இன்று மதிய காட்சி ஓடிக்கொண்டிருந்த நிலையில் மானை 4மணி அளவில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஓர் அறையில் மின்கசிவு காரணமாக தீடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் , தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அனைக்க முயற்சி செய்யப்பட்டன.