கல்பாக்கம் : கல்பாக்கத்தில் அணுமின் நிலைய விஞ்ஞானி ராஜன் வீட்டில் 13 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராஜன் வீட்டில் முன்பக்க ஜன்னலை உடைத்து ரூ. 10,000 மற்றும் லேப்டாப் எடுத்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.