டெல்லி : மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.