சென்னை: நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.