சென்னை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள மின் கட்டண மையங்களில், டெபிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை துவக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை பணம், வங்கி காசோலை, வரைவோலை, இணையதளம், கிரெடிட், டெபிட் கார்டு என ஏதேனும் ஒன்றின் வாயிலாக செலுத்தலாம். மின் கட்டண மையம் தவிர்த்து, தபால் நிலையம், அரசு இ-சேவை மையம், சில வங்கி கிளைகளில் மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. ஆனால், பெரும்பாலானோர், மின் கட்டண மையங்களில் பணமாகத்தான் கட்டணம் செலுத்துகின்றனர்.