சீர்காழி அருகே வாய்க்கால் தூர்வாரியபோது அம்மன் சிலை கண்டெடுப்பு

சீர்காழி: சீர்காழி அருகே ஆலவேலி கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரியபோது இரண்டடி உயரம் கொண்ட அம்மன்சிலை கண்டெடுக்கப்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆலவேலி கிராமத்தில் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாய்க்கால் தூர்வாரும் போது கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தாசில்தார் சபீதாதேவி சம்பவ இடத்திற்கு சென்று இரண்டடி உயரம் கொண்ட அம்மன் சிலையை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து வந்தார். அங்கு சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: