திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த பாண்டியன் என்ற விவசாயி ரூ.3.90 லட்சம் கடன் பெற்றதாக பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கி கடன் எதுவும் பெறாத நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் விவசாயி பாண்டியன் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடன் பெறாதபோதும் அதற்காக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.46,000 எடுக்கப்பட்டதாக விவசாயி பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.