சியோல்: வடகொரியா 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வந்ததால் அமெரிக்கா மற்றும் ஐநா சபை, அதன் மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதைத் தொடர்ந்து வடகொரியாவும், அமெரிக்காவும் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த பிப்ரவரி மாதம் ஹனோய் நகரில் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.