லண்டன்: கடந்த மாதத்துடன் முடிந்த ஓராண்டில் பிரிட்டனுக்கு 5 லட்சம் இந்தியர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். கடந்த ஓராண்டில் லண்டனுக்கு பயணம் செய்த இந்தியர்கள், சீனர்கள் மட்டும் மொத்தத்தில் 49 சதவீதம் பேர். கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜூன் வரை 5 லட்சத்து 3 ஆயிரம் இந்தியர்கள் லண்டனுக்கு பறக்க விசா பெற்றுள்ளனர். பிரிட்டன் தேசிய புள்ளியியல் துறை அதிகாரி இதுபற்றி கூறியதாவது: பொதுவாகவே சமீப காலமாக பிரிட்டனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 2011 ல் இருந்து மற்ற நாட்டு மாணவர்களை விட இந்திய மாணவர்கள் மிக அதிகம். கடந்தாண்டு 5 லட்சம் இந்தியர்கள் பயணம் செய்ததற்கு இன்னொரு காரணம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. மிக அதிக அளவில் இந்திய ரசிகர்கள் குவிந்துள்ளனர்.