காரிமங்கலம்: தமிழகத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் தாங்களாகவே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.