திருப்பத்தூர்: வேலூரில் இருந்து திருப்பத்தூர் வந்த தமிழக அரசு பஸ்சில் கன்னட எழுத்துக்கள் மற்றும் முத்திரையுடன் இருந்த பேப்பர் ரோலில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் நேற்று முன்தினம் பயணம் செய்தார். அப்போது கண்டக்டர், அவரிடம் ₹82க்கான மெஷின் மூலம் பிரின்ட் செய்து டிக்கெட்டை வழங்கினார். அந்த டிக்கெட் ரோலின் இருபுறமும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் ‘கே.ஆர்.எஸ்.டி.சி’ என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும், கர்நாடக அரசு போக்குவரத்து கழக முத்திரையும் அச்சிடப்பட்டிருந்தது. தமிழக அரசு பஸ் டிக்கெட்களில் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பெயர் அச்சிடப்பட்டதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.