கோவை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் குறிப்பாக, கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, கோவையில் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த சித்திக், கோவை உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த ஜாகீர் ஆகிய 2 பேரை கோவையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களுக்கு தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.