அருண்ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் டெல்லி பயணம்

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லிக்கு நேரில் அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள்.உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அருண்ஜெட்லி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள். பின்னர் அவரது உடல் வைத்திருக்கும் ஜெட்லி வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதுடன், அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: