வேளச்சேரி, தாம்பரம், கடற்கரை ரயில்கள் இன்று இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வேளச்சேரி, தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே மின்சார ரயில்கள் வழக்கம்போல் ஞாயிற்றுக் கிழமை நேரப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி மார்க்கமாகவும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாகவும் தினந்தோறும் 150க்கும் மேற்ப்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக முன்னறிவிப்பு செய்து அந்த மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் குறிப்பிட்ட நேரம் ரத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கும் போல் ரயில்கள் இயக்கப்படும். அதன்படி கடற்கரை- வேளச்சேரி மார்க்கமாகவும், எழும்பூர்- தாம்பரம் மார்க்கமாகவும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று கடந்த 23ம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை நேரப்படி  இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: