திருவனந்தபுரம்: கேரளாவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உதவி செய்து வந்ததை உளவுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், அவர் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ரகீம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீசார் வலை விரித்தனர். இந்நிலையில் அப்துல் காதர் ரகீமுக்கு ெகாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அப்துல் காதர் ரகீம் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்தது.