சென்னை: பிராட்வே டான்பாஸ்கோ இளைஞர் மன்றத்தின் 75ம் ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு, தொடர்ந்து பல விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, திருத்தந்தை மோகன்ராஜ் நினைவு யு-14 கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது. வியாசர்பாடி டிபிஒய்சி, கீழ்ப்பாக்கம் டிபிஒய்சி, எப்சி மெட்ராஸ், அன்பு இல்லம் கிரேட் கோல்ஸ் கால்பந்து மன்றம், புனித பீட்ஸ் பள்ளி, டான் பாஸ்கோ பள்ளி என சென்னையை சேர்ந்த 16 பள்ளிகள், கால்பந்து கிளப்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வியாசர்பாடி டிபிஒய்சி - சென்னையின் எப்சி அணிகள் மோதின.