குமரியில் திருமண ஆசைக்காட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தீக்கனம்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அருகே தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறிய மாணவன் தனது நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட மாணவி அவரிடம் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த லியோ பிராங்க்ளின் என்பவர் மாணவியை சந்தித்துள்ளார். அவரிடம் காதலன் திருந்திவிட்டதாகவும், அவருடன் உன்னை சேர்த்து வைப்பதாகவும் கூறி தனது மோட்டார் வாகனத்தில் திப்பிய மலை பகுதிக்கு அழைத்து சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி அவரை மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளார். இதை அடுத்து அங்கே அழுதபடி நின்றிருந்த மாணவியிடம் காவல் துறையினர் விசாரித்ததில் நிகழ்ந்த சம்பவம் அனைத்தையும் மாணவி கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் லியோ பிராங்க்ளின் மற்றும் காதலன் உள்ளிட்ட 3 மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: